புதன், 2 மார்ச், 2011

ஓட்டு எண்ணிக்கையை 1 மாதம் தள்ளி வைப்பதா? தலைவர்கள் கடும் கண்டனம்

சட்டசபை தேர்தல் முடிந்து ஒரு மாதம் கழித்து ஓட்டு எண்ணிக்கையை வைப்பதால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.   இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன்:-
 
நான்கு அல்லது ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடக்கும்போது கடைசி கட்ட ஓட்டுப்பதிவு முடிந்தபின் ஓட்டு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்ற விதிகள் உள்ளன. கடந்த 6 தடவை இது கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இது ஒன்றும் புதுசு அல்ல. பாதுகாப்பாக இருக்கும் என நம்புகிறோம். தேர்தல் நடக்கும்போது முறைகேடு நடக்காமல் தடுப்பதில் தேர்தல் கமிஷன் அதிக கவனம் செலுத்த வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் ராமகிருஷ்ணன்:-
 
ஒரே நேரத்தில் 5 மாநிலங்களில் தேர்தல் நடப்பதால் ஒரே தேதியில் ஓட்டு எண்ணிக்கை அறிவிக் கப்பட்டுள்ளது. இதற்கு மேல் எந்த கருத்தையும் நான் சொல்ல விரும்பவில்லை. இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன்:-
 
தேர்தல் முடிவு அறிவிக்கும் தேதியை தள்ளி வைக்க அவசியமில்லை. தேர்தலை வேண்டுமானால் தள்ளி வைத்திருக்கலாம்.
 
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்:- மற்ற மாநிலங்களில் தேர்தல் நடப்பதால் தமிழ்நாட்டின் தேர்தல் முடிவை தள்ளி வைப்பது சரியல்ல. தேர்தலை முன் கூட்டியே வைத்தது அதிர்ச்சி அளிக்கிறது. மார்ச் 19-ந்தேதி மனு தாக்கல் தொடங்குவது என்பது அரசியல் கட்சிகள் சற்றும் எதிர்பார்க்காதவை. மே 13-ந்தேதி ஆட்சி முடிவை கணக்கிட்டு ஓட்டு எண்ணிக்கையை தாமதமாக முடிவு செய்திருக்கிறார்கள். தேர்தலை மே மாதத்தில் நடத்தி இருக்கலாம்.

கருத்துகள் இல்லை: