புதன், 2 மார்ச், 2011

ஜெயலலிதா மட்டுமே முதல்வராக்க தமிழக மக்கள் முடிவு

கருணாநிதி குடும்பத்தின் நெருங்கிய நண்பரும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா ஸ்பெக்ட்ராம் விவகாரத்தில் ரூபாய் 1 லட்சத்து 86 ஆயிரம் கோடியை தொலைத் தொடர்பு இலாக்காவிற்கு நட்டத்தை ஏற்படுத்தி தன்னையும், கருனாநிதி, ராசாத்தி அம்மாள், கனிமொழி குடும்...பத்தை வளப்படுத்திவிட்டு தவறே நடக்கவில்லை பட்டி மன்றம் நடத்துவது எந்தவிதத்திலும் நியாயமோ தெரியவில்லை இந்த பணத்தை கொண்டுதான் தமிழக சட்ட மன்ற தேர்தலை கருணாநிதி சந்திக்க உள்ளார் என பரவலான குற்ற சாட்டு உள்ளது. இந்த லட்சணத்தில் தமிழகத்தில் எந்த திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளது. என்று என்னிபார்த்தால் எல்லாமே கருணாநிதி குடும்பத்தாரின் வளத்திற்கு தான் சென்றடைந்ததே தவிர எந்த ஒரு திட்டத்தாலும் ஏழை மக்களுக்கு பயன் இல்லை ரேசனில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போடுகிறேன் என மார்த்தட்டும் கருனாநிதி இதனால் ஏழை மக்கள் பயன் அடைந்தார்களா இல்லையே? கட்சிக்காரன் தான் பயன் அடைகிறான் ரேசன் அரிசியை 75 சதவீதம் திமுகவினர் மற்றும் அரிசி கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டு அன்டை மாநிலமான கேரளா, ஆந்திரா, கர்நாடகத்திற்கு லாரி லாரியாக கடத்தப்படுகிறது இதனால் இழப்பு ஏழை மக்களுக்கு தான், லாபம் ஆட்சிக்காரர்களுக்கும், கடத்தல் காரர்களுக்கும் தான். இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி, இலவச எரிவாயு, அடுப்பும் கட்சிக்காரார்களுக்கும் தான். வழங்கப்படுகிறது ஆட்சியை மக்களுக்காக கருணாநிதி நடத்துகிறாரா என்றால் இல்லை இல்லவே இல்லை தன்னுடைய குடும்பத்திற்காக தான் நடத்துகிறார்.

வெளி மார்க்கெட்டில் அரிசி ரூ45 கிலோவிற்கு விலை. காய்கறிகளும் விலையை எண்ணிப்பார்த்தால் இனி காய்கறியை வாங்காமல் கிழங்குகளை சமைத்து பசியை ஆற்றி கொள்ள வேண்டியது தான். மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தல் குறித்து மக்களின் மனநிலை என்ன என்பது குறித்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலுர், திவண்ணாமலை, கடலுர், விழுப்புரம், தர்மபுரி, சேலம், கரூர், கிருஷ்ணகிரி, அரியலுர், பெரம்பலுர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, நெல்லை, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், திருவாரூர், நாகப்பட்டிணம், தஞ்சாவூர், நாமக்கல், நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், ஆகிய இடங்களில் உயர்மட்ட, நடுத்தர மற்றும் ஏழை மக்களை சந்தித்து கருத்து கேட்ட போது ஜெயலலிதாதான் தமிழக முதல்வராக வரவேண்டும் அப்போதுதான் ரவுடிகள் அட்டகாசம் ஒழியும் பெண்கள் தைரியமாக நடமாடுவார்கள். கட்டபஞ்சாயத்து என்ற பேச்சே இருக்காது. கந்து வட்டி, ஸ்பீடு வட்டி, மீட்டர் வட்டி கொடுமை ஒழியும் பெண்கள் தைரியமாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுக்கலாம் வரதட்சணை கொடுமை ஒழியும் அநாதைகளுக்கான தொட்டில் குழந்தை திட்டத்தை அறிமுகப்படுத்தியவரும் ஜெயலலிதாவே அனைத்து இந்து கோவில்களிலும் அன்னதான திட்டத்தை கொண்டு வந்தவர் ஜெயலலிதாதான் ஒரு பெண்ணாக இருந்து தன்னந்தனியே எவருக்கும் பயப்படாமல் நல்லதை மக்களுக்கு செய்து கெட்டதை முற்றிலுமாக ஒழித்தவர் ஜெயலலிதாதான். இவர் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் அனைத்தையும் தவிடு பொடியாக்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் ஜெயலலிதாமட்டுமே. அவர் அனுபவித்த துன்பங்கள் கொஞ்சமா நஞ்சமா? மக்களுக்கான திட்டங்கள் முற்றிலுமாக போய்சேர தைரியமிக்க பெண்மணி, துணிச்சல் மிக்க பெண்மணி நேர்மையான பெண்மணி ஜெயலலிதா மட்டுமே அதற்காக தான் --------வருகிற தேர்தலில் முதல்வராக்க தமிழக மக்கள் முடிவு செய்து விட்டனர்.

                                                                                      ........நன்றி கார்த்திக்கேய சேர்வை........

கருத்துகள் இல்லை: