வெள்ளி, 4 மார்ச், 2011

ரூ. 35 லட்சம் ரொக்கப்பணம் ; 4 கிலோ தங்கம் ;சென்னை டிரேடுமார்க் துணை பதிவாளர் கைது

நாட்டில் உள்ள முக்கிய கம்பெனிகள் தங்களுடைய பிராண்ட்மார்க் ( டிரேட்மார்க்) குறியீட்டை பதிவு செய்யும் சென்னை அலுவலகத்தின் துணை பதிவாளரை சி.பி.ஐ., போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்திய திருநாட்டில் அரசியல்வாதிகளுக்கோ , மக்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கோ பணிகள் எவ்வளவு தூரம் இருக்கிறதோ இல்லையோ நமது சி.பி.ஐ., அதிகாரிகள் தற்போது கூடுதல் பணிச்சுமையுடன் உள்ளனர். இதனால் சி.பி.ஐ., அலுவலக அதிகாரிகள் நியமனத்தை சற்று உயர்தினால் கொஞ்சம் பணிகள் வேகமாக நடைபெறும் என்ற யோசனையும் புறந்தள்ள முடியாது.

சமீப காலத்தில் சாதாரண போலீஸ் வழக்குப்பதிவு செய்யும் முறையை விட சி.பி.ஐ.,மிஞ்சியிருக்கிறது. காரணம் பெரும் ஊழல், அல்லது முக்கியப்புள்ளிகள் மீதான குற்றம் விசாரிக்கும் போது பிற தலையீட்டை விலக்கி நிற்பதற்கென சி.பி.ஐ., விசாரணை கோரப்படுகிறது. இது நியாயமாக இருக்கும் என்ற நம்பிக்கை இன்றும் மக்கள் மத்தியில் சற்று உயரமாகவே இருந்து வருகிறது என்று கூறினால் அதிகமாக இருக்க முடியாது.

போபர்ஸ் பேரம் முதல் , ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த், ஆருசீ கொலை, இது போன்று பல்வேறு வழக்குகளில் சி.பி.ஐ., கவனம் செலுத்தி வருகிறது.

நேற்று சென்னையில் டிரேட்மார்க் பதிவு துறை துணை பதிவாளர் கஸ்தூரியை லஞ்ச விழிப்பு சி.பி.ஐ., போலீசார் கைது செய்தனர்.

முக்கிய நகரங்களில் பிளாட் வீடுகள்: பெண் அதிகாரியான கஸ்தூரி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், லஞ்சப்புகார் அடிப்படையிலும் கைது செய்ப்பட்ட இவரது வீட்டில் இருந்து ரூ. 33 லட்சம் ரொக்கப்பணம் 3 கிலோவுக்கு மேல் எடை கொண்ட தங்க நகைகள், 85 லட்சம் டிபாசிட் செய்யப்பட்ட விவரம், மற்றும் முக்கிய ஆவணங்களை அள்ளிச்சென்றனர். தற்போது ரிமாண்ட் செய்யப்பட்டு சிறைக்குள் அடைக்கப்பட்டார். இவருக்கு சென்னை அடையாறு, திருப்பதியில் தலா 2 பிளாட்டுகளும், ஆமதாபாத், மும்பையில் தலா ஒரு பிளாட்டும் இருப்பது தெரியவந்துள்ளது.

இன்றைய சி.பி.ஐ., பணி : இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல் தொடர்பாக முக்கியஸ்தர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தினர். இந்த போட்டி ஒளிபரப்பு தொடர்பான விஷயத்தில் பலகோவி பணம் லஞ்சமாக பெறப்பட்டுள்ளது. இதனால் முன்னாள் பிரசார்பாரதி தலைமை அதிகாரி லல்லி வீடு மற்றும் டில்லியில் 4 இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது. மேலும் பஞ்சாப், அரியான ஐகோர்ட் நீதிபதியாக இருந்த யாதவ் லஞ்ச வழக்கு தொடர்பாக இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

கருத்துகள் இல்லை: