வியாழன், 3 மார்ச், 2011

ஐந்து மாநில தேர்தல்: புகார் தெரிவிக்க இலவச போன்

ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தேர்தல் தொடர்பான புகார்களை, 1965 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலங்களில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவித்து தீர்வுகாண விரும்புபவர்களுக்கு வசதியாக, 1965 என்ற இலவச தொலைபேசி எண் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இணையதளத்திலும் புகார் செய்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அளிக்கப்படும் புகார்கள் பதிவு செய்யப்பட்டு, குறிப்பிட்ட காலத்திற்குள் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், இணைய தள முகவரிகளை அறிவிப்பார்கள் என, தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி நேற்று அறிவித்தார்.

கருத்துகள் இல்லை: