சனி, 5 மார்ச், 2011

தீப்பிடித்தது மேலும் ஒரு நானோ கார் !

அகமதாபாத்தில் மேலும் ஒரு நானோ கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் வாடிக்கையாளர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அகமதாபாத்தைச் சேர்ந்த விபுல் ஜானி என்பவர் தனது நானோ காரில் சிவரஞ்சனிகிராஸ் ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது காரில் இருந்து புகை வரத் துவங்கியது. அடுத்த சில நிமிடங்களில் அவரது நானோ கார் முழுவதும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதுவரை ஏழு நானோ கார்கள் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில் மீண்டும் ஒரு கார் தீப்பிடித்து எரிந்துள்ள சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர்.

அந்த காரில் கூடுதலாக செய்யப்பட்ட தவறான ஒயரிங் காரணமாக தீப்பிடித்திருக்காலம் என கருதுவதாக டாடா மோட்டார்ஸ் விளக்கம் அளித்துள்ளதாகவும் இதனை காரின் உரிமையாளரும் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், நானோ கார்கள் திடீர் திடீரென தீப்பிடித்து எரிவது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கீழ்த்தட்டு மக்களின் கார் கனவை பூர்த்தி செய்யும் என்று எதிபார்க்கப்பட்ட, உலகின் விலை குறைந்த கார் என்று நம்பப்பட்ட டாடா நானோ கார், தொடர்ந்து எரிந்து வருவது வாடிக்கையாளர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: