சனி, 5 மார்ச், 2011

முதல்முறையாக தென் மாவட்டங்களில் “சீட்” கேட்கும் பா.ம.க.

தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு தொகுகி பங்கீடு முடிந்ததும் எந்தெந்த தொகுதிகள் எந்த கட்சிக்கு என்பது முடிவு செய்யப்படும். இந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு பா.ம.க. நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளது.
  பா.ம.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் தைலாபுரம் தோட்டத்தில் விருப்ப மனு பெறப்படுகிறது. விருப்ப மனு கொடுக்க 7-ந் தேதி கடைசி நாள் ஆகும். நேற்று வரை 1000 பேர் மனு கொடுத்துள்ளனர்.
மாநில இளைஞர் அணி துணை செயலாளர் பிரகாஷ் (வேளச்சேரி), மாவட்ட செயலாளர் ஜெயராமன் (மைலாப்பூர்), தொழிற்சங்க செயலாளர் ஞானசேகரன் (திரு.வி.க.நகர்), கே.என்.சேகர் (அம்பத்தூர்), திருக்கச்சூர் ஆறுமுகம் (திருப்போரூர்), வேல்முருகன் (நெய்வேலி), வி.ஜெ.பாண்டியன் (அண்ணாநகர்), முத்துக் குமார் (புவனகிரி) ஆகிய தொகுதிகளுக்கு மனு கொடுத்துள்ளனர்.
முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி பெயரில் வில்லிவாக்கம், தியாகராயநகர், விருகம்பாக் கம் ஆகிய தொகுதிகளில் மனு கொடுத்துள்ளார்கள்.   பா.ம.க. தரப்பில் சென்னையில் 4 தொகுதிகள் மற்றும் கடந்த தேர்தலில் போட்டியிட்டு வென்ற தொகுதிகளை கேட்க முடிவு செய்துள்ளனர்.
முதல் முறையாக தென் மாவட்டங்களிலும் கால்பதிக்க பா.ம.க. திட்டமிட்டுள்ளது. நெல்லை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங் களில் தலா ஒரு தொகுதியை குறிப்பிட்டு கேட்கவும் முடிவு செய்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: