புதன், 13 ஜூலை, 2011

மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தின் தஞ்சை மாவட்ட பொதுக்குழு!

அல்லாஹ்வின் திருப்பெயரால் !

மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகத்தின் தஞ்சை மாவட்ட பொதுக்குழு பண்டாரவாடையில் 10/07/2011 அன்று மாலை நடை பெற்றது .
கூட்டத்திற்கு நிறுவன தலைவர் பாளை ரபீக் அவர்கள் தலைமை வகித்தார்.மாநில கொள்கை பரப்பு செயலாளர் பேட்டை முஸ்தபா , மாநில செயலாளர் தாழை ராஜா ஆகியொர் முன்னிலை வகித்தனர் .தஞ்சை மாவட்ட புதிய நிர்வாகிகள் த...ேர்ந்தெடுக்கப்பட்டு கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

புதிய நிர்வாகிகள் - மாவட்ட தலைவர் - M கமருஜமான்
மாவட்ட செயலாளர் - மாங்குடி கனி
மாவட்ட பொருளாளர் -
மாவட்ட து .தலைவர் - தஞ்சை இப்ராம்ஷா
மாவட்ட து செயலாளர் - முகம்மது மகரூப்
மாணவரணி செயலாளர் - யூசுப் ஷா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் .

தீர்மானங்கள் -- 1 , அரசு பிரேத பரிசோதனை கூடங்களில் பெண் உடல்களுக்கு பெண் மருத்துவர்களை கொண்டும் ,பெண் ஊழியர்களை கொண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவது.

2 , இஸ்லாமியர்களுக்கு தற்பொழுது இருக்கும் 3.1/2 சதவிகித இடஒதுக்கீட்டை ஐந்து சதமாக உயர்த்தி வழங்க கோரியும்,அதை கண்காணிப்பதற்கு குழு அமைக்க கோரியும் தமிழக அரசை வலியுறுத்துவது ,

3, எதிர்வரும் ஜூலை 24 நெல்லை மாவட்டம் பேட்டை நவாப் வாலாஜா பள்ளிவாசல் சொத்தை ஆக்கிரமிப்பு காரர்களிடம் இருந்து மீட்க "கரசேவை" என்னும் மீட்பு போராட்டத்திற்கு தஞ்சை மாவட்டத்தில் இருந்து திரளாக கலந்துக்கொள்வதெனவும்,

4 , தஞ்சை குடந்தை நெடுஞ்சாலையில் வாகனங்கள் விபத்தை தடுக்க வேக கட்டுப்பாடு முறைபடுத்த மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை ,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து பேசி தீர்வு காண வேண்டுமெனவும்,

5 , பாபநாசம் வட்டாச்சியர் அலுவலகத்தில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் பதிய வருபவர்களை தேவை இல்லாமல் அலைக்கழித்து வருவதை வன்மையாக கண்டிக்கிறது என பல தீர்மானங்களோடு இப்பொதுக்குழு நிறைவு பெற்றது.

கருத்துகள் இல்லை: